ஐரோப்பா

பெல்ஃபாஸ்ட் வன்முறை : 12 பொலிஸார் மீது தாக்குதல்!!

பெல்ஃபாஸ்டில்  இரண்டாவது நாளாக நேற்றைய தினமும்  வன்முறை சம்பவங்கள் தொடர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் 12 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்ததுடன், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக 24 வயதுடைய பெண் ஒருவர் மீது ஒழுங்கற்ற நடத்தை தொடர்பில் வடக்கு அயர்லாந்து பொலிஸார் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளனர்.

மேலும் 28 வயதுடைய ஆண் ஒருவர் மீது மாறுவேடத்தைக் களையத் தவறியது, காவல்துறையினருக்கு இடையூறு செய்தது மற்றும் காவல்துறையை எதிர்த்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் கலகத்தில் ஈடுபட்டவர்கள்  செங்கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளால் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்