இலங்கை செய்தி

யானை தாக்கி பெண் பலி : திருமலையில் சோகம்!

திருகோணமலை மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒரு பெண் காயமடைந்துள்ளார்.

திருகோணமலை சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமேதங்கபுர பகுதியில் யானை தாக்கி 73 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது.

யானை தாக்கி காயமடைந்த இப் பெண் சேருவில வைத்தியசாலையிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலவெவ பகுதியில் (10) நேற்றிரவு யானை தாக்கியதில் ஏ.டபிள்யூ. ஜெயரத்ன (69 வயது) என்ற பெண் படுகாயம் அடைந்துள்ளார்.

கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை