பாகிஸ்தானில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து!
பாகிஸ்தானில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதை அறிவிக்கவில்லை.
பாகிஸ்தானின் காஷமீர் ஆக்கரமிப்பு பகுதியான முசாஃபராபாத் (Muzaffarabad) அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக இராணுவ பிரிவு வெளியிட்டுள்ள ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் உள்ளூர் அரசாங்கம் ஒரு போராட்டக் குழுவிற்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து, அதன் உறுப்பினர்கள் விரைவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்ததால், சமீப நாட்களாக முசாஃபராபாத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.




