மீண்டும் போர் வெடித்தால் பாரிய நெருக்கடி ஏற்படும்: EU எச்சரிக்கை!

மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் Kaja Kallas அழைப்பு விடுத்துள்ளார்.
சிலவேளை இந்தப் பதற்றம் முழுமையான போராக மாறினால், பிராந்தியம் முழுவதும் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
தற்போதைய சூழலில் அமைதிப் பேச்சுவார்த்தைகளும் தற்காலிக போர்நிறுத்தங்களும் மிகவும் பலவீனமாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சைப்ரஸ் நாட்டின் நிகோசியாவில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர் , வன்முறையைத் தவிர்த்து அமைதி வழியில் தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.







