இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை : ஈரான் திடீர் மனமாற்றம்!

இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வந்ததாக ஈரானின் கூட்டு இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மேலும் ஏதேனும் “ஆக்கிரமிப்பு மற்றும் விரோதச் செயல்களை” மேற்கொண்டால், “முன்பை விட மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான முயற்சிகளைச் சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய சமீபத்திய தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேலும் ஈரானும் “உடனடியாகத் துப்பாக்கிச் சூட்டை நிறுத்த வேண்டும்” என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியதை தொடர்ந்து இந்த சமீபத்திய தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது.







