இஸ்ரேலின் செயலுக்கு ஈரான் கடும் கண்டனம்!
லெபனான் ராணுவத்தினர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஈரான் வெளிவிவகார அமைச்சு வன்மையாகக் கண்டித்துள்ளது.
இஸ்ரேல் வேண்டுமென்றே லெபனானின் இறைமையையும் பாதுகாப்பையும் சீர்குலைக்க முயற்சிப்பதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர்Esmaeil Baghaei பகாவி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதல் லெபனானின் அமைதி மற்றும் செழிப்பிற்கு எதிரான ஒரு தெளிவான ஆக்கிரமிப்புச் செயல் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கும் லெபனான் அரசுக்கும் ஈரான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.




