ஐரோப்பா கல்வி

பாலஸ்தீன கொடியை அகற்ற ஸ்லோவேனியாவின் புதிய பிரதமர் உத்தரவு!

மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் புதிய வலதுசாரி அரசாங்கம் பொறுப்பேற்றவுடன், அந்நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையில் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது

முன்னாள் பிரதமர் Robert Golob பாலஸ்தீனத்தை அங்கீகரித்து அந்நாட்டின் கொடியை ஏற்றியிருந்த நிலையில், புதிய பிரதமர் Janez Jansa அதனை அகற்ற உத்தரவிட்டுள்ளார்.

காசா மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஸ்லோவேனியா நாட்டின் முந்தைய அரசு கடுமையாக விமர்சித்து ஆயுதத் தடையையும் விதித்திருந்தது.

ஆனால் புதிய பிரதமர் அந்த முடிவுகளை தலைகீழாக மாற்றத் திட்டமிட்டுள்ளார்.

இந்த அரசியல் மாற்றத்தை இஸ்ரேல் வரவேற்றுள்ளதுடன், ஸ்லோவேனியாவின் தலைநகரில் தனது முதல் தூதரகத்தை விரைவில் திறக்கவுள்ளது.

இதன் மூலம் ஸ்லோவேனியா தனது சர்வதேச நிலைப்பாட்டை மாற்றி, இஸ்ரேலுடன் நெருக்கமான உறவை வளர்க்கத் தொடங்கியுள்ளது.

Dila

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்