ஹிஸ்புல்லா – இஸ்ரேலிய தலைவர்களுடன் ட்ரம்ப் பேச்சுவார்த்தை!! மத்தியஸ்தத்திற்கான கதவு திறப்பு!
லெபனானில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக அமெரிக்காவுடனான மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளை ஈரான் நிறுத்தி வைத்தது.
இதனைத் தொடர்ந்து அதிரித்த பதற்றங்களை தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், லெபனானுக்கு இஸ்ரேலிய படைகள் செல்லாது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், எந்த இஸ்ரேலியப் படைகளும் பெய்ரூட்டிற்குச் செல்லாது, மேலும் அவர்கள் செல்லும் வழியில் உள்ள படைகள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன” என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லாவிற்கிடையே எந்த தாக்குதல் நடவடிக்கைகளும் இடம்பெறாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்தைகளை நிறுத்தியதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் கணிசமாக உயர்ந்தன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், மிக விரைவில் எண்ணெய் விலை அதலபாதாளத்தில் வீழும்” என்று தான் நினைப்பதாக கூறினார்.





