தானசாலையில் வரிசையில் இருந்த மக்கள் மீது மோதிய கார்!! 06 பேர் உயிரிழப்பு!
மீகொடவில் வெசாக்கை முன்னிட்டு தானம் பெற காத்திருந்த மக்கள் கூட்டத்தினர் மீது கார் ஒன்று மோதியதில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த குழந்தை உட்பட ஏழு பேர் ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவிசாவெலவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த வாடகைக் கார் ஒன்று, மீகோடா சந்தியில் தானசாலையில் வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது வரிசையில் இருந்த 15, 32 மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35 மற்றும் 38 வயதுடைய மூன்று ஆண்களும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் பாதுக்கவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களும், பிலியந்தலாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினரும் அடங்குவதாகக் கூறப்படுகிறது.
வாடகைக் காரின் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.




