ஹன்டா வைரஸ் பரவல் : தனிமைப்படுத்தல் காலத்தை நீட்டித்தது ஆஸ்திரேலியா!
ஹன்டா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, எம்வி ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் இருந்து தாயகம் திரும்பிய ஆறு பேருக்கான தனிமைப்படுத்தல் காலத்தை ஆஸ்திரேலியா அரசாங்கம் நீட்டித்துள்ளது.
பெர்த் அருகே உள்ள ஒரு மையத்தில், அவர்கள் 42 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை தனிமைப்படுத்தலில் உள்ள ஆறுபேரும் நலமாக உள்ளதாக சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அர்ஜென்டினாவிலிருந்து கேப் வெர்டேவுக்குச் சென்ற எம்வி ஹோண்டியஸ் கப்பலில் ஏற்பட்ட ஹன்டா வைரஸ் பரவலால் குறைந்தது 11 பயணிகள் பாதிக்கப்பட்டதோடு, மூன்று பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




