தைவான், சீனா விவகாரம் அணுவாயுத நெருக்கடியை உருவாக்கும்!!
தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்படும் இராணுவ மோதல், விரைவாக ஒரு அணு நெருக்கடியாக உருவெடுக்கக்கூடும் என்று புதிய பாதுகாப்பு மதிப்பீடு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
தைவானுக்கு வொஷிங்டன் அளித்து வரும் பாதுகாப்பையும் பெய்ஜிங் கடுமையாக விமர்சித்துள்ளது.
லண்டனைத் தளமாகக் கொண்ட பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பான சர்வதேச மூலோபாய ஆய்வுக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுடடிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் ஆசிய-பசிபிக் பகுதியை மையமாகக் கொண்ட” ஒரு புதிய அணு ஆயுதப் போட்டியின் விளிம்பில் உலகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பிராந்திய நாடுகளும், மூலோபாய நலன்களைக் கொண்ட நாடுகளும் தங்கள் அணு ஆயுதக் கிடங்குகளை விரிவுபடுத்துகின்றன, அதே நேரத்தில் அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகள் நீண்ட தூர மரபுவழித் தாக்குதல் திறன்களைப் பின்தொடர்கின்றன, இவை இரண்டுமே மூலோபாய நிலைத்தன்மைக்கு சவாலாக அமைகின்றன” என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீனா, தைவானை ஒரு பிரிந்து சென்ற மாகாணமாகக் கருதுகிறது. மேலும், “அமைதியான மீள் ஒன்றிணைப்பையே” விரும்புவதாகக் கூறினாலும், அத்தீவைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர பலத்தைப் பயன்படுத்துவதையும் நிராகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





