உலகம் செய்தி

ஈரான் போர் எதிரொலி: உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு நெருக்கடி!

ஈரான்மீதான போர் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு நெருக்கடியை தூண்டியுள்ளதாக சர்வதேச எரிசக்தி முகமையின் தலைவர் (IEA) பாத்திஹ் பிரோல் Fatih Birol எச்சரித்துள்ளார்.

இந்நிலைமையானது நாடுகளைத் தங்களின் முதலீட்டு உத்திகளை மாற்றியமைக்கவும், உள்நாட்டு வளங்களை நோக்கி நகரவும் கட்டாயப்படுத்தியுள்ளது.

கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்த போதிலும், எண்ணெய் துறையிலான முதலீடுகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வீழ்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஒட்டுமொத்த உலகளாவிய எரிசக்தி முதலீடு 2026-ஆம் ஆண்டில் 3.4 டிரில்லியன் டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய மாற்றங்கள் 1970-களின் எண்ணெய் துறையில் ஏற்படுத்திய தாக்கத்தை போன்ற ஒரு பெரிய மாற்றத்தை உலக சந்தையில் ஏற்படுத்தும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!