இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது RCB!
IPL 2026 தொடரில் Qualifier 1 ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முதல் அணியாக நேடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
தர்மசாலாவில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் அணி , முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 254 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
குஜராத் தரப்பில் ஜேசன் ஹோல்டர் மற்றும் காகிசோ ரபாடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து 255 ஓட்டங்கள் என்ற மாபெரும் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆர்சிபியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பவர் பிளேயிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது.
இறுதியில் குஜராத் அணி 19.3 ஓவர்களில் 162 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.





