ஈரானில் முடிவுக்கு வருகிறது இணைய முடக்கம்!! கட்டுப்பாடுகள் நீடிக்கலாம்!
பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்ட போராட்டத்தை கட்டுப்படுத்த ஈரான் இணைய முடக்கத்தை அறிவித்திருந்தது.
இந்த முடக்கம் கடந்த 03 மாதங்களாக அமுலில் உள்ள நிலையில் அதனை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் இணைய முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர நேற்றைய தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இருப்பினும், நெட்பிளாக்ஸ் (NetBlocks) போன்ற சுயாதீன கண்காணிப்பு அமைப்புகள், நாடு முழுவதும் இணைய இணைப்பு தொடர்ந்து தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன.
தடைகள் நீக்கப்பட்டாலும், இணையக் கட்டுப்பாடுகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஈரானிய ஆட்சியை சீர்குலைப்பதாகக் கருதப்படும் வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சேவைகளை குடிமக்கள் அணுகுவதைக் கட்டுப்படுத்தும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.




