உலகம் காட்டுமிராண்டித்தனமான சட்டங்களுக்குத் திரும்பும் அபாயத்தில் உள்ளது – ஷி ஜின்பிங!
உலகம் காட்டுமிராண்டித்தனமான சட்டங்களுக்குத் திரும்பும் அபாயத்தில் உள்ளதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எச்சரித்துள்ளார்.
சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள புட்டின் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை இன்று சந்தித்தார்.
இதன்போது இரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் நாடுகளின் உறவு குறித்து அன்பான வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டனர், மேலும் மூலோபாய உறவுகளை ஆழப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் இருநாட்டு தலைவர்களும் நட்புறவு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நீட்டிக்க முறைப்படி ஒப்புக்கொண்டனர்.
வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழலில் இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஷி ஜின்பிங் சர்வதேச சூழல் மகத்தான மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது, மேலும் உலகம் காட்டுமிராண்டித்தனமான சட்டங்களுக்குத் திரும்பும் அபாயத்தில் உள்ளது” என்று கூறியுள்ளார்.
சீனாவும் ரஷ்யாவும் “வரலாற்றைத் தலைகீழாக மாற்றும் அனைத்து ஒருதலைப்பட்சமான அச்சுறுத்தல்களையும் நடவடிக்கைகளையும்” கூட்டாக எதிர்க்க வேண்டும் என்றும் அவர் இதன்போது கூறினார்.
சீனாவும் ரஷ்யாவும் “வரலாற்றைத் தலைகீழாக மாற்றும் அனைத்து ஒருதலைப்பட்சமான அச்சுறுத்தல்களையும் நடவடிக்கைகளையும்” கூட்டாக எதிர்க்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.





