அரசியல் இலங்கை செய்தி

“தமிழர்களுடன் நாம் மோதவில்லை: புலிகளே எமது எதிரிகள்” – நாமல் ராஜபக்ச!

“புலிகளுடனேயே எமக்கு பிரச்சினை இருந்தது. தமிழ் மக்களுடன் ஒத்துழைப்புடன் செயல்பட்டுவருகின்றோம். எமக்கு தமிழ் உறவினர்களும் உள்ளனர்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

” நாட்டில் போர் முடிவடைந்திருந்தாலும், போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர்களை பழிவாங்க வேண்டும் என்ற பிரிவினைவாத சிந்தாந்தம் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை.

போர் நிறைவுக்கு வந்த நாளை நாம் நினைவுகூரினாலும் இதற்கு பங்களிப்பு செய்த படையினர் சிறையில் உள்ளனர். புலி ஆதரவாளர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே இவ்வாறான நடவடிக்கை இடம்பெறுகின்றது.

புலனாய்வு பிரிவு பிரதானிகூட சிறையில் உள்ளார். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான கோப்புகளை ஒளித்தவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதான் ஜே.வி.பி. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலாகும்.

நாம் தமிழர்களுடன் போரிடவில்லை என்பதை புலி ஆதரவு தமிழ் டயஸ்போராக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்களுடன் நாம் ஒத்துழைப்புடன் செயல்பட்டுவருகின்றோம். சகோதரத்துடன் பழகுகின்றோம்.

புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். அந்த அமைப்புடன் எமக்கு பிரச்சினை இருந்தது. அவ்வமைப்புக்கு எதிராகவே நாம் போர் செய்தோம்.” – என்றார் நாமல் ராஜபக்ச.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!