சீனாவின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளே அமைதியின்மைக்கு முக்கியக் காரணம் – தைவான் அதிருப்தி!
சீனாவின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளே பிராந்தியத்தில் அமைதியின்மை மற்றும் ஸ்திரத்தன்மையின்மைக்கும் மிகப்பெரிய காரணமாக உள்ளது என்று தைவானின் பிரதமர் சோ ஜுங்-டாய் (Cho Jung-tai ) தெரிவித்துள்ளார்.
சீனக் கடற்படை பயிற்சிக்காக ஒரு விமானம் தாங்கி கப்பல் படையை மேற்கு பசிபிக் பகுதிக்கு அனுப்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “சீன மக்கள் குடியரசு, தைவான் ஜலசந்திப் பகுதி, இந்தோ-பசிபிக் பகுதி, தென் சீனக் கடல் மற்றும் ஜப்பானைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூட பல்வேறு அளவுகளிலும் வகைகளிலும் இராணுவப் பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்தி, கடல்வழிப் பயணப் பாதுகாப்பைப் பாதிக்கிறது,” என்று அவர் கூறினார்.
“இதுவே பிராந்தியத்தில் அமைதியின்மைக்கும் ஸ்திரத்தன்மையின்மைக்கும் மிகப்பெரிய காரணமாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் ஆயுதப் படைகள் தைவானைச் சுற்றி ஏறக்குறைய தினந்தோறும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





