ஹோர்முஸ் இடையூறு தொடர்ந்தால் வாரந்தோறும் 10 கோடி பீப்பாய் எண்ணெய் இழப்பு ஏற்படும் என எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் இடையூறுகள் தொடர்ந்தால் உலக எண்ணெய் சந்தையில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என சவூதி அரேபியாவின் Saudi Aramco தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர் தெரிவித்துள்ளார்.
நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து குறைந்ததால், ஒவ்வொரு வாரமும் சுமார் 10 கோடி பீப்பாய் எண்ணெய் சந்தையிலிருந்து இழக்கப்படும் நிலை உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலை மேலும் சில வாரங்கள் நீடித்தால், அடுத்த ஆண்டுவரை எண்ணெய் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
முன்பு தினமும் சுமார் 70 எண்ணெய் கப்பல்கள் இந்த வழியாகச் சென்ற நிலையில், தற்போது அது 02 முதல் 05 கப்பல்களாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





