அமெரிக்காவும் ஈரானும் ஒரு அமைதி ஒப்பந்தத்தை நெருங்கி வருவதாக தகவல்!
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் தொடர்பாக அமெரிக்காவும் ஈரானும் ஒரு அமைதி ஒப்பந்தத்தை நெருங்கி வருவதாக பாகிஸ்தானிய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து 48 மணி நேரத்திற்குள் ஈரானிடமிருந்து ஒரு பதிலை அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும், ஈரான் இதனை ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஒரு சாத்தியமான ஒப்பந்தம் ஏற்பட்டால், இரு தரப்பினரும் ஹோர்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈரான் அணு ஆயுத செறிவூட்டலுக்குத் தற்காலிகத் தடை விதிக்க உறுதியளிக்கும், அதே நேரத்தில் அமெரிக்கா தடைகளை நீக்கி, முடக்கப்பட்டிருந்த பில்லியன் கணக்கான ஈரானிய நிதிகளை விடுவிக்கும்.
பாகிஸ்தானின் கோரிக்கைகள் மற்றும் இராணுவ வெற்றிகளின் அடிப்படையில் ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ திட்டத்திற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.





