துபாயின் பிரபல நட்சத்திர விடுதியை மூட தீர்மானம்!
துபாயின் ஜுமைரா புர்ஜ் அல் அரப் (Jumeirah Burj Al Arab) சொகுசு விடுதி 18 மாதங்களுக்கு மூடப்படவுள்ளது.
ஒரு விரிவான புனரமைப்புத் திட்டத்திற்காக மே மாதம் முதல் 2027 ஆம் ஆண்டின் இறுதி வரை மூடப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக இயங்கி வந்த இந்த ஹோட்டலின் தனித்துவமான தன்மையைப் பாதுகாத்து, அதன் புகழ்பெற்ற அலங்காரத்தைப் புதுப்பித்து மேம்படுத்துவதே இந்தப் புனரமைப்பின் நோக்கமாகும்.
புனரமைப்புத் திட்டங்களில், 198 அறைகளையும் மறுவடிவமைப்பு செய்வதும், ஸ்பாவை மேம்படுத்துவதும் அடங்கும்; இதன் வடிவமைப்பிற்கு பிரெஞ்சு உள்ளகக் கட்டிடக் கலைஞர் டிரிஸ்டன் ஆவர் (Tristan Auer) தலைமை தாங்குகிறார்.
ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இந்த விடுதியின் ஒரு சிறு பகுதி சேதமடைந்துள்ளதை தொடர்ந்து மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.





