“யாழ்ப்பாணத்தை தமிழகத்திடம் கொடுத்துவிடுங்கள்” – அர்ச்சுனா எம்.பி.
” கச்சத்தீவை மட்டும் அல்ல யாழ்ப்பாணத்தையும் தமிழகத்துக்கு கொடுத்துவிடுங்கள்.” – என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அர்ச்சுனா எம்.பி. கூறியவை வருமாறு,
” தமிழ் மக்களின் இதயத்தை கவர்த்த தமிழக முதல்வர் விஜய்க்கு முதலில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
வடக்கு மாகாணத்தில் தீவு பகுதிகளுக்கு மின்சாரம் இல்லை என்பது பெரும் குற்றச்சாட்டாக உள்ளது.
நெடுந்தீவுக்கு அண்மையில் நான் சென்றபோது அங்கு 50 சதவீதமான மக்களுக்கு மின்சாரம் இல்லை. 7 நாட்களில் 5 நாட்களுக்கு மின்சாரம் இல்லை.
கச்சத்தீவை விஜய் கேட்டார் என்பதற்காக அதனை தரமுடியாது என NPP அரசாங்கம் கூறியது.
கச்சத்தீவை மட்டும் அல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்துக்கு கொடுத்து விடுங்கள். தமிழக மக்கள் எங்களை பார்த்துக்கொள்வார்கள்.’ – என்றார் அர்ச்சுனா.





