இணையவழி அச்சுறுத்தல் – வடகொரியா மீது குற்றச்சாட்டு!
பியோங்யாங் இணையவழி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை வட கொரிய வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது.
வொஷிங்டனின் நீண்டகால விரோதக் கொள்கையை நியாயப்படுத்தும் நோக்கில் இந்த குற்றச்சாட்டு புனையப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவிலிருந்து “இல்லாத ‘இணையவழி அச்சுறுத்தல்'” இருப்பதாக அமெரிக்கா அரசியல் நோக்கங்களுக்காக தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், இந்தக் குற்றச்சாட்டுகள் “நமது நாட்டின் நற்பெயரைக் கெடுக்கும் ஒரு அபத்தமான அவதூறு தவிர வேறொன்றுமில்லை” என்றும் விவரித்துள்ளது.




