யூத வெறுப்பு சம்பவம் : பிரித்தானிய நீதிமன்றத்தின் தீர்ப்பு!
பிரித்தானியாவில் யூத வெறுப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 48 வயதான ஷஃபிக் ரஹ்மானுக்கு தற்காலிகமாக பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொடர்புடைய வழக்கு இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையான ஷஃபிக் ரஹ்மான் (Shafiq Rahman) தனது குற்றங்களை ஒப்புக்கொண்ட நிலையில், வழக்கின் தீர்ப்பை ஜூலை 10 ஆம் திகதி வழங்குவதாக அறிவித்தார்.
அதுவரை அவரை தற்காலிக பிணையில் செல்ல அனுமதிப்பதாகவும் கூறியுள்ளார்.
ரஹ்மான், மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தபோது, யூத-விரோத சொற்களை கூறி கத்தியதாகவும், பாதிக்கப்பட்டவரை ‘அழுக்கு யூதன்’ என்று விவரித்து குழந்தைகளை கொல்லவதாக கூறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு காணொளியில், எந்தவித தூண்டுதலும் இன்றி நடந்த இந்தத் தாக்குதலின்போது, ரஹ்மான் அவரது ‘தாடையை உடைத்து விடுவதாக’ மிரட்டியதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.





