உலகம் செய்தி

போர் நிறுத்தம் நீடிப்பு! கடற்படை முற்றுகை தொடரும் என்கிறார் ட்ரம்ப்!!

ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்தத்தை நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump அறிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் இன்று முடிவடைய இருந்த நிலையிலேயே ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மத்தியஸ்த முயற்சியில் ஈடுபடும் பாகிஸ்தானால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், ஈரான்மீதான கடற்படை முற்றுகை தொடர்ந்து அமுலில் இருக்கும் என ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் தாக்குதலுக்குத் தயாராக இருந்த அமெரிக்காவின் இந்தத் திடீர் மனமாற்றம், இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கான புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் இந்த முடிவை வரவேற்றுள்ளதுடன், ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!