திருமலையில் சோகம்!விபத்தில் இளைஞன் பலி
திருகோணமலை கப்பல்துறை பகுதியில் வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் மாட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பலியாகியுள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் திருகோணமலை நடேசன் கோயில் அடியில் வசித்து வரும் எஸ். நிரோஜன் (36 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவருடன் பயணித்த திருகோணமலை -கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த ஜீவராணி (47வயது) கை உடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





