ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்!
ஹார்முஸ் நீரிணையை, ஈரான் ராணுவம் மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. ஈரான் அரச ஊடகங்கள் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நடவடிக்கை தொடர்வதாலேயே ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது எனக் கூறப்படுகின்றது.
அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கையை கடல் கொள்ளை என ஈரானிய புரட்சிகர காவல் படை விமர்சித்துள்ளது.
தமது துறைமுகங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள தடையை எதிர்த்து, இப்பாதையை மூடுவதாக ஈரான் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹார்முஸ் நீரிணையை ஈரான் நேற்று மீண்டும் திறந்தது. இந்நிலையிலேயே தற்போது மூடப்பட்டுள்ளது.





