உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையை கடந்தது முதல் சுற்றுலாக் கப்பல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் ஏற்பட்ட பிறகு, முதல் முறையாக ஒரு சுற்றுலா கப்பல் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்து சென்றுள்ளது.

ஹார்முஸ் நீரிணையை மீள திறப்பதற்கு ஈரான் இணங்கிய நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்பான பயணம் இடம்பெற்றுள்ளது.

செலஸ்டியல் டிஸ்கவரி என்ற பெயருடைய இந்த கப்பல், துபாயில் சுமார் ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்த பிறகு தற்போது ஓமானை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

கப்பல்களைக் கண்காணிக்கும் MarineTraffic தளம், இந்தப் பயணத்தின் போது கப்பலில் பயணிகள் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்ட பின்னர் உலகளவில் ஏற்பட்ட நெருக்கடி நிலை படிப்படியாக தளரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!