வாய்ப்பை வீணடிக்கக் கூடாது – லெபனான் ஜனாதிபதி வலியுறுத்தல்
இஸ்ரேலுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் நாட்டின் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமானவை என்று லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன்,தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தமே பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கான முக்கிய நுழைவாயில் என அவர் கூறியுள்ளார்.
மேலும், போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்துவது, தெற்கு பகுதிகளில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறுவதை உறுதி செய்வது, கைதிகளை விடுவிப்பது மற்றும் எல்லைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது ஆகியவை லெபனானின் முக்கிய இலக்குகள் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டுகளில் பல சிரமங்களை எதிர்கொண்ட லெபனான் மக்கள் தற்போது புதிய சூழ்நிலையை எதிர்கொள்கிறார்கள் என்றும், இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காமல் போகக்கூடும் என்பதால் இதனை தவறவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





