ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களின் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் நாளை (17) செயற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீர்செய்வதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.





