அமைதி பேச்சு: சவூதி இளவரசர், பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை!
சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோருக்கிடையில் ஜித்தாவில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது மத்திய கிழக்கு பிராந்திய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
குறிப்பாக ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் நடைபெறும் அமைதி பேச்சு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானால் மேற்கொள்ளப்படும் இத்தகைய ராஜதந்திர முயற்சிகளை சவூதி இளவரசர் வரவேற்றுள்ளார்.





