ஹோர்முஸ் ஜலசந்தியை கைப்பற்ற அமெரிக்க படைகளுக்கு உத்தரவு!
ஹோர்முஸ் ஜலசந்திக்குள் நுழையும் அல்லது வெளியேறும் அனைத்து கப்பல்களையும் அமெரிக்கா முற்றுகையிடும் என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் நடந்த அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, ட்ரம்பின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் மீடியா பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “சர்வதேச கடல் பகுதியில் ஈரானுக்கு சுங்கம் செலுத்திய ஒவ்வொரு கப்பலையும் தேடிப்பிடித்து இடைமறிக்குமாறு நமது கடற்படைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்,” என்று கூறியுள்ளார்.
“ஹோர்முஸ் ஜலசந்திக்குள் நுழைய அல்லது வெளியேற முயற்சிக்கும் எந்தவொரு கப்பலையும் முற்றுகையிடும் செயல்முறையை அமெரிக்கப் படைகள் உடனடியாகத் தொடங்கும். சட்டவிரோதமாக சுங்கம் செலுத்தும் எவருக்கும் ஆழ்கடலில் பாதுகாப்பான பயணம் கிடைக்காது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.





