செய்தி தமிழ்நாடு

வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும் – கன்னியாகுமரியில் விஜய் பிரசாரம்

தனது ஆட்சியில் தமிழ்நாடு ஏஐ டிஜிட்டல் தலைநகராக மாறும் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் மகதானபுரம் பகுதியில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும் என தெரிவித்த விஜய் இலஞ்சம் இன்றி ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டம் சென்றடையும் எனவும் கூறினார்.

அரசின் திட்டங்களைப் பெற தன் அடையாள அட்டை தரப்படும் என்றும் 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை திட்டம் உருவாக்கப்படும் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மக்களின் மனுக்கள் குறித்து சட்டசபையில் விவாதிக்கப்படும் என்றும் விஜய் மேலும் கூறியுள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!