ட்ரம்பின் ஆட்சி – அமெரிக்காவை புறக்கணிக்கும் போப் லியோ!
அமெரிக்காவின் 250வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்குப் பதிலாக, போப் லியோ XIV ஜூலை 4 ஆம் திகதி லம்பேடுசாவில் (Lampedusa) உள்ள ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோரைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
போப் லியோ XIV அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியில் இருக்கும் வரை அமெரிக்காவிற்குத் திரும்ப மாட்டார் என்று அறிக்கைகள் குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
உலகளாவிய மோதல் மற்றும் இராஜதந்திரம் குறித்த போப்பின் கருத்துக்கள், ட்ரம்பின் கொள்கைகளுக்கு, குறிப்பாக “டான்ரோ கோட்பாட்டிற்கு” (Donroe Doctrine) விரோதமானவை என்று விளக்கி, பென்டகன் அவரது உரையை விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே போப் லியோ ட்ரம்ப்பை வெளிப்படையாக எதிர்த்து வருகிறார். ஈரானுக்கு எதிரான அவரது அச்சுறுத்தல்களைக் கண்டித்து, போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





