லெபனானிலும் போர் நிறுத்தம் அவசியம்: பிரிட்டன் வலியுறுத்து!
உலகளாவிய வர்த்தகத்திற்கு அவசியமான ஹார்முஸ் நீரிணையை மீள திறக்குமாறு பிரிட்டன் வெளிவிவகாரச் செயலாளர் Yvette Cooper கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானையும் இணைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதால், அங்கு நிலவும் மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்க இந்த நடவடிக்கை அவசியமாகக் கருதப்படுகிறது.
அதேவேளை, பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், சவூதி அரேபிய இளவரசரைச் சந்தித்து மத்திய கிழக்கில் நிலையான அமைதியை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.





