ஒப்பந்தத்தை மீறினால் ஈரான்மீது மிகப்பெரிய ராணுவ தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை!
ஈரானுடனான ஒப்பந்தம் முழுமையாகப் பின்பற்றும் வரை அமெரிக்கப் படைகள் அப்பகுதியிலேயே நிலைநிறுத்தப்படும் என்று டொனால்ட் டிரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார்.
மேற்படி ஒப்பந்தத்தை ஈரான் மீறினால் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும், ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ராணுவம் தற்போத தங்களைத் தயார்படுத்தி வருவதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் இந்த சமூக ஊடக பதிவானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





