“நம்பிக்கையில்லாப் பிரேரணை”- அரசின் நிலைப்பாடு அறிவிப்பு!
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு Kumara Jayakody எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்று அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சரவை பதில் பேச்சாளராக விஜித ஹேரத் பங்கேற்றிருந்தார்.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர், அரசாங்கம் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் எனக் குறிப்பிட்டார்.





