கை விலங்குடன் அழைத்து வரப்பட்ட பிரபல நடிகை!
பிரபல நடிகை மிருணாள் தாகூர் கை விலங்குடன் அழைத்து வரப்பட்டதால் ரசிகர்ளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்த காணொளி இணையத்தில் வெளியாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் மிருணாள் தாகூர்.
அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டக்காயிட்’ படம் எதிர்வரும் 10 ஆம் திகதி திரைக்கு வர இருக்கிறது.

இதைத்தொடர்ந்து படத்தின் விளம்பர நிகழ்ச்சி தீவிரமாக நடந்து வருகிறது.
பட விழாவுக்கு மிருணாள் தாகூர் கை விலங்குடன் திடீரென அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் படத்தின் விளம்பர பணிகளுக்காக அவர் கை விலங்குடன் அழைத்து வரப்பட்டார் என்றதும் ரசிகர்களுக்கிடையே இருந்த பரபரப்பு அடங்கியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகின்றது.





