அமெரிக்காவிற்கு கறுப்பு நாள் – ஈரான் வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்க ஆளில்லா விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்திய பின்னர், ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் ஓர் அறிக்கை வெளியிட்டனர்.
ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர், ஒரு அமெரிக்க விமானத்தைச் சுட்டு வீழ்த்திய காணொளியை வெளியிட்டு, இன்று அமெரிக்காவிற்கு ஒரு கறுப்பு நாள் என்று கூறியுள்ளனர்.
அவர்கள் தங்களின் புதிய, அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டு 2 விமானங்கள், 5 ஆளில்லா விமானங்கள் மற்றும் 2 கிரூஸ் ஏவுகணைகளை அழித்துள்ளனர்
ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரின் கூற்றுப்படி, விமானப் பணியாளர் ஒருவர் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற முடியவில்லை என்றும், ஈரானிய வான் பாதுகாப்பு வீரர்கள் ஈரானிய எல்லைகளை எதிரிக்கு அபாயகரமானதாக மாற்றியுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன
மேலும், அமெரிக்காவின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட காணொளியையும் ஈரானிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது
ஈரான் ஒரே நாளில் 3 அமெரிக்க விமானங்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளது என்பதும், அதே நேரத்தில் ஒரு விமானி சிறைபிடிக்கப்பட்டதாக முரண்பாடான தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.





