இலங்கை செய்தி

NPP ஆட்சியில் அமைச்சரொருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி Kumara Jayakody மீதான ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில், கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் Colombo High Court நேற்று குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அழைப்பாணைக்கு இணங்க, குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் குமார ஜயகொடி நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் குற்றச்சாட்டுகள் அடங்கிய பத்திரம் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதையடுத்து குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் குமார ஜயகொடியை, தலா 1 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு பேரின் பிணையில், விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள குமார ஜயகொடி 2016-ஆம் ஆண்டில் லங்கா உர நிறுவனத்தில் பணியாற்றியபோது, ​​கொள்முதல் செயல்முறையின் போது ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயற்பட்டு, அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!