குவைட் சர்வதேச விமான நிலையத்தின் மீது அதிரடி தாக்குதல்
குவைட் சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் விமான நிலையத்தின் எரிபொருள் தாங்கி தீப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் போர் தொடங்கிய பிறகு குவைத் சர்வதேச விமான நிலையம் இலக்கு வைக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
பாதுகாப்பு காரணங்களுக்காக குவைத் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் போர் தொடங்கிய காலத்திலிருந்தே இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, குவைத்திற்கு வர வேண்டிய அனைத்து விமானங்களும் சவுதி அரேபியாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.





