சுரேஷ் சாலேவுக்கு ஆதரவாக கையெழுத்து வேட்டை! கூட்டு எதிரணி புது வியூகம்!!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே Suresh Saleh கைது செய்யப்பட்டதற்கு கூட்டு எதிரணி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மக்கள் மனுவில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை மஹரகமவில் இன்று ஆரம்பமானது. மஹரகம நகரசபையின் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் இதற்குரிய ஏற்பாட்டை செய்திருந்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எதிரணி அரசியல் பிரமுகர்கள் மற்றும் தேரர்கள் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு லட்சம் கையொப்படங்கள் திரட்டப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும் என எதிரணி அரசியல் பிரமுகர்கள் குற்றஞ்சாட்டினர்.





