மத்திய கிழக்கு போரால் ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம்!
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் உலக நாடுகளில் விலையேற்றம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலை ஏற்படக்கூடும் என்று எதிர்வுகூறப்படுகின்றது.
எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகங்களில் ஏற்படும் தாக்கமானது பணவீக்கத்தை அதிகரிக்க வழிவகுக்கும்.
குறிப்பாக பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படும் என்பதை ஆஸ்திரேலிய நிதி அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் மே மாதம் முன்வைக்கப்படவுள்ள கூட்டாட்சி வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான தற்காப்பு நடவடிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.
இந்த நெருக்கடியான சூழலில், வட்டி விகித மாற்றங்கள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து ஆஸ்திரேலிய மத்திய வங்கியும் கழுகு பார்வை செலுத்தியுள்ளது.
அதேவேளை, மத்திய கிழக்கு போரானது தெற்காசிய பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது.
குறிப்பாக இலங்கையின் தேயிலை ஏற்றுமதிக்கு ஆபத்து ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.




