மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் : விசா காலம் நீட்டிப்பு!
ஈரானில் அதிகரித்து வரும் பதற்ற நிலைமை காரணமாக மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 28, 2026 முதல் மத்திய கிழக்கு நோக்கிச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவர்களின் விசா காலம் நிறைவடையலாம்.
இந்த சூழ்நிலையை நிவர்த்தி செய்வதற்காக, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை ஏழு நாள் இலவச விசா நீட்டிப்பை வழங்க முடிவு செய்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கள் புறப்படும் ஏற்பாடுகள் முடியும் வரை சட்டப்பூர்வமாக நாட்டில் தங்கலாம்.
தற்போதைய விசா காலாவதியாகும் திகதியில் இருந்து ஏழு நாட்களுக்கு விசா நீட்டிப்பு செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




