மத்திய கிழக்கில் அமெரிக்க விமான சக்தி பெருக்கம்: 120 க்கும் மேற்பட்ட விமானங்கள் பிராந்தியத்தில் நிலைநிறுத்தம்
அமெரிக்கா மத்திய கிழக்கில் பரந்த அளவிலான இராணுவ சொத்துக்களை குவிப்பதை தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் அணுசக்தி திட்டம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான ஒப்பந்தம் குறித்து அதிகபட்சம் 10 முதல் 15 நாட்கள் என கூறினார்.
அரபிக் கடலில், USS ஜெரால்ட் ஆர் ஃபோர்டு விமானத்தாங்கி கப்பல் மற்றும் E-3 சென்ட்ரி AWACS விமானம் போன்ற முக்கிய படை பெருக்கிகள் செயற்பாடுகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன.
ஈரான், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பிய கடிதத்தில், எந்தவொரு அமெரிக்க ஆக்கிரமிப்புக்கும் “தீர்க்கமாக மற்றும் விகிதாசார ரீதியாக” பதிலளிப்போம் என தெரிவித்தது.
இதேவேளை “எந்தவொரு கட்டுப்பாடற்ற விளைவுகளுக்கும் அமெரிக்கா முழு பொறுப்பை ஏற்கும்” என்று கூறியுள்ளது.
திறந்த மூல புலனாய்வு மற்றும் விமான கண்காணிப்பு தரவுகளின் படி, கடந்த சில நாட்களுக்குள் அமெரிக்கா மத்திய கிழக்கில் 120 க்கும் மேற்பட்ட விமானங்களை நிலைநிறுத்தியுள்ளது. இது 2003 ஈராக் போருக்குப் பிறகு மிகப்பெரிய எழுச்சியாகும்.
நிலையான செயல்பாட்டிற்கான விமானங்களில் E-3 AWACS, F-35 ஸ்டெல்த் ஸ்ட்ரைக் ஃபைட்டர்கள், F-22 ஏர் சுபீரியாரிட்டி ஜெட்கள், F-15 மற்றும் F-16 விமானங்கள் அடங்குகின்றன.





