மரண தண்டனை விதிக்கப்பட்ட 817 கைதிகள் சிறையில் அடைப்பு!
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 817 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, செப்டம்பர் 30, 2025 நிலவரப்படி, 792 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் உட்பட 811 உள்ளூர் கைதிகள் மரண தண்டனை பெற்றுள்ளனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஐந்து வெளிநாட்டினரும், பயங்கரவாதம் தொடர்பான குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட நபர் ஒருவரும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கூடுதலாக, 70 வெளிநாட்டினர் உட்பட 311 நபர்கள் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதில், பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களுக்காக மூன்று நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





