கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நாட்டை வந்தடைந்தார்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
அவர் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன், டிட்வா (Ditwah) புயலால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிடவுள்ள அவர், மீட்புப் பணிகளுக்காக சர்வதேச நாணய நிதியம் வழங்கக்கூடிய மேலதிக ஒத்துழைப்புகள் குறித்தும் ஆராயவுள்ளார்.
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் அவரது இந்த விஜயம் அமைந்துள்ளது.
மேலும் எதிர்வரும் புதன்கிழமை வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





