செய்தி

ரஷ்ய அச்சுறுத்தல் – போராட தயாராகுங்கள் : ஸ்டாமர் அழைப்பு!

ரஷ்யாவிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதால், ஐரோப்பா மோதலைத் தேடாவிட்டாலும், போராடத் தயாராக இருக்க வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ( Keir Starmer) தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கான அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகும் ரஷ்யாவின் மறுசீரமைப்பு துரிதப்படுத்தப்படும் என்றும், முழுமையான மற்றும் வலுவான பதில் தேவைப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற முனிச் பாதுகாப்பு மாநாட்டில் தலைவர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆக்கிரமிப்பைத் தடுக்கவும், தேவைப்பட்டால் போராடத் தயாராகவும் இருக்க, யுகத்தின் நாணயமாக ‘கடின சக்தியை’ உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஸ்டாமர் இதன்போது வலியுறுத்தினார்.

இதேவேளை வடக்கு அட்லாண்டிக் மற்றும் உயர் வடக்குப் பகுதிக்கு இங்கிலாந்து போர் கப்பல்களை அனுப்பும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!