உக்ரைன்–ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய அமெரிக்கா அழுத்தம்
ரஷ்யாவுடனான போரை ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய அமெரிக்கா விரும்புவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இரு தரப்பும் அடுத்த வாரம் அமெரிக்காவின் மியாமியில், பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உக்ரைன் மற்றும் ரஷ்யா குழுக்கள் அமெரிக்காவில் சந்திக்க வேண்டும் என அமெரிக்கா முதன் முறையாக முன்மொழிந்தது. எங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தி விட்டோம்.
தற்போது வொஷிங்டன் அல்லது மாஸ்கோவிலிருந்து உடனடி கருத்து இல்லை, ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் பதவியேற்ற பிறகு, மோதலுக்கு முடிவு காண அழுத்தம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே, உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்புக்கு ரஷ்யா தாக்குதல்கள் தொடர்கின்றன, இதனால் உறைபனி நிலைகளில் மின்தடை பரவலாக ஏற்படுகிறது” என்றார்.





