இலங்கை

சிவப்பு எச்சரிக்கை : மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் குறித்த சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை டிசம்பர் 9 ஆம் திகதி முதல் டிசம்பர் 19 ஆம் திகதி வரை பாதுகாப்பான தற்காலிக மையங்களுக்கு அப்புறப்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மாவட்டச் செயலாளர்களுக்கு தெரிவித்துள்ளது.

இந்த மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை மாவட்டச் செயலாளர், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள், பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர், இலங்கை பொலிஸ் மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினரின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் பாதுகாப்பான மையங்களுக்கு அப்புறப்படுத்தப்பட வேண்டிய பிரதேச செயலாளர் பிரிவுகள் பின்வருமாறு:

கண்டி மாவட்டம்:

ஹத்தரலியத்த,
யடிநுவர,
உடுதும்பர,
பாதஹேவாஹேட்ட,
மெததும்பர,
பஸ்பாகேகோரளை,
தெல்தோட்ட,
பூஜாபிட்டிய,
கங்கஇஹல கோரளை,
பன்வில,
கங்கவட்ட கோரளை,
உடபலாத்த,
ஹாரிஸ்பத்துவ,
குண்டசாலை,
மினிப்பே,
தொழுவ,
தும்பனே,
அக்குரணை,
உடுநுவர
பாததும்பர.

கேகாலை மாவட்டம்:

கேகாலை,
கலிகமுவ,
மாவனெல்ல,
புலத்கொஹுபிட்டிய,
அரநாயக்க,
யட்டியாந்தோட்ட,
ரம்புக்கனை,
வரகாபொல.

குருநாகல் மாவட்டம்:

மாவத்தகம,
மல்லவப்பிட்டிய,
ரிதிகம.

மாத்தளை மாவட்டம்:

நாவுல,
வில்கமுவ,
பல்லேபொல,
அம்பன்கங்ககோரளை,
லக்கல,
பல்லேகம,
உக்குவெல,
இரத்தோட்ட,
மாத்தளை
யடவத்த.

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!