உலகம் செய்தி

தாய்லாந்தில் தகனம் செய்யும் இறுதி நேரத்தில் சவப்பெட்டியில் இருந்து கேட்ட சத்தம்!

தாய்லாந்தின் பாங்காக்கின் (Bangkok) புறநகர்ப் பகுதியில் புத்த கோவிலில் தகனம் செய்யப்படவிருந்த பெண் ஒருவர் இறுதி நேரத்தில் உயிருடன் இருப்பதை கண்டு அதிகாரிகள் வியந்துபோயுள்ளனர்.

கோவிலின் பொது மேலாளர் பைரத் சூத்தூப் (Pairat Soodthoop) சவப்பெட்டியில் இருந்து லேசான தட்டும் சத்தத்தை கேட்டப்பின்னர் திகைத்துப்போனதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

சவப் பெட்டியை திறந்தப்பின்னர் குறித்த பெண் பக்கவாட்டில் படுத்திருந்ததாகவும், நீண்ட நேரமாக அவர் சவப் பெட்டியை தட்டியிருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பெண் உயிருடன் இருப்பதை அறிந்த  கோயிலின் மடாதிபதி அந்தப் பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியதுடன், குறித்த பெண் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இரத்த சக்கரை அளவு மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக அவர் மயங்கிய நிலைக்கு சென்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவருக்கு சுவாசக் கோளாறு அல்லது மாரடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!